மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து மூலோபாயக் குழு!

21.10.2024 08:45:44

தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும், எதிர்காலத் தீர்மானங்களுக்கு தலைமைத்துவம் மற்றும் சரியான வழிகாட்டுதலை வழங்குவதற்கும் மூலோபாயக் குழுவொன்றை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.

   

எதிர்வரும் பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அக்கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த வியூகக் குழுவை அமைப்பதன் முக்கிய நோக்கம், வரவிருக்கும் தேர்தல்களை ஒரு கட்சியாக எதிர்கொள்வதற்கான வலிமையையும் வழிகாட்டலையும் வேட்பாளர்களுக்கு வழங்குவதாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.