தொடரும் மின்சார பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!

20.01.2022 06:36:42

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கான புதிய பொது முகாமையாளரை பதவி நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரித் ஜயனாத் தயாரத்ன குறிப்பிட்டார்.