பா.ஜ.க. ஆண்டதும் போதும்! மக்கள் மாண்டதும் போதும்!

04.04.2024 07:10:21

பா.ஜ.க. ஆண்டதும் போதும்,  மக்கள் மாண்டதும் போதும், என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்திய கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்களைக் கூறி பிரதமர் நரேந்திர மோடி வாக்குகளைப் பெற நினைக்கின்றார் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.