உக்ரைன் கீவ்வில் இருட்டடிப்பு

26.11.2022 11:17:59

ரஷ்யா படையின் தாக்குதலால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அழித்துள்ள காரணத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷ்யா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

கீவ்வில் இருட்டடிப்பு

மேலும் அவர் தெரிவிக்கையில் “இந்நிலையில், நாட்டில் 60 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இன்னும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் மற்றும் தலைநகர் கீவ்வில் இருட்டடிப்பு தொடர்கிறது.

மொத்தத்தில், 60 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அததோடு மின்வெட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துள்ளது.”எனவும் தெரிவித்தார்.