முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

10.05.2022 12:17:04

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பக்கத்தில் விசேட கோரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுப்பதற்காக நாசகார சக்திகள் வன்முறையை தூண்டுவதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதை தடுப்பதற்காக மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.