7 சைவ ஆலயங்களுக்கும் அனுமதி!

28.03.2024 14:44:22

யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்ற 07 சைவ ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.