ஞாயிறன்று 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தவும்

18.04.2024 09:09:29

'உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.

இத்தாக்குதல் தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) ஆன்மிக தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதாகவும், அதன்படி 20 ஆம் திகதி பிற்பகல் முதல் 21 ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு, இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு, காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.