முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

30.07.2021 15:05:11

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர்

இதுவரை காலமும் தமக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்றும் உடனடியாக தமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.