நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுப்பதே ரணிலின் கொள்கையாகும்!

23.04.2024 07:57:07

கடந்த அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தவறுகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நிவர்த்தி செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்

 

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்க சகல தரப்பினரும் பின்வாங்கிய போது ரணில் விக்ரமசிங்க தான் பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த நாட்டை பொறுப்பேற்றார்.

அவர் யார் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுப்பதே அவரின் கொள்கையாகும். கடந்த அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தவறுகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நிவர்த்தி செய்கின்றார். எனவே, அவரது ஆட்சியில் இந்த நாட்டில் எவரும் பட்டினியை எதிர்கொள்ளமாட்டார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.