வீதி விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

02.12.2021 05:38:26

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தார் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கு வழங்கப்படும் நட்ட ஈட்டுத்தொகையை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

தற்போது வழங்கப்படும் தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு இதுவரை வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவாக செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைவோருக்கு வழங்கப்படும் 1 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.