ரணிலுடன் சங்கமிக்கவுள்ள உறுப்பினர்கள்!

02.08.2022 09:00:00

நாளைய தினம் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது எனவும், ஆளுங்கட்சிப் பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளது எனவும் உள்ளக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் ரணிலுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித்துடன் இணையவுள்ள உறுப்பினர்கள்

அதேபோல் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பட்டி, சரத் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.