படகு கவிழ்ந்ததில் 90 பேர் பலி !

08.04.2024 07:15:41

மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளனர்.

படகு விபத்தில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகே இவ்வாறு வித்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகு விபத்தின் போது காணாமல்போன ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் குறித்த படகில் அதிகபட்சம் 100 பேர் பயணிக்க முடியுமெனவும் அதில் சுமார் 130 பேர் இருந்ததாக பயணித்ததாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.