இலங்கை கிரிக்கெட் வீரருக்கான தண்டனை

22.12.2021 11:36:29

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட, இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த 73 வயதான அப்பாத்துரை, இளவயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்பறுத்தல் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், அப்பாத்துரைக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூக சீர்திருத்த அடிப்டையிலான தண்டனை விதித்து, எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில்  தண்டனையை அனுபவிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.