மும்பையில் நிலச்சரிவு

18.07.2021 15:27:12

மும்பை- செம்பூரிலுள்ள பாரத் நகர் குடியிருப்புப் பகுதியின் சுவர்கள் நிலச்சரிவில் இடிந்து விழுந்துள்ளது.

இதில் வீடுகளின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 8 பேர் இடிபாடுகளின் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றமையினால், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.