பிரதமர் மோடியின் பிரம்மாண்ட வாகனப் பேரணி!

09.04.2024 07:20:46

நாடாளுமன்றத்  தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7ஆவது முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.

 

இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகை தரவுள்ளார் எனவும், அதன்பின்னர் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, வாகன பேரணி நடைபெறவுள்ள இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் 3 ,500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.