தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது!

05.08.2021 05:39:28

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 123 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 53,266 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.