மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா

11.05.2022 11:50:32

நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திறைசேரியின் முன்னாள் செயலாளர் எம்.சிறிவர்தன மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரை நேற்று சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.