பொதுப் போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியீடு

24.09.2021 07:08:40

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, அதற்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களது சம்மேளனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் 50,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் இணைப்பாளர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.