நாணய சுழற்றியால் கிடைத்த பதவி

29.09.2022 00:29:26

நாணய சுழற்சி மூலம் கிடைத்த வெற்றி

கண்டி - கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சிசிர ரணசிங்க நாணய சுழற்சி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களான சமிந்த கருணாரத்ன, ரவிப்பிரிய சாமிகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிசிர ரணசிங்க ஆகியோர் இந்தப் பதவிக்கு போட்டியிட்டனர்.

ஆரம்ப சுற்று வாக்குகளின் போது கருணாரத்ன 10 வாக்குகளையும் ரணசிங்க 08 வாக்குகளையும் சாமிக்கர 02 வாக்குகளையும் பெற்றிருந்தனர். சமிகர நீக்கப்பட்டதன் பின்னர், கருணாரத்ன மற்றும் ரணசிங்க இருவரும் இரண்டாவது சுற்று வாக்களிப்பில் தலா 10 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

 

சமனிலையாக கிடைத்த வாக்குகள்

அதனையடுத்து மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனகா ஹேரத், நாணய சுழற்சி மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சியின் சிசிர ரணசிங்க, கண்டி - கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரவிப்பிரிய சாமிகர ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.