தேனீக்கள் கொட்டியதால் 18 தொழிலாளர்கள் காயம்

13.10.2021 14:07:30

ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையத்தில் மலைத் தேனீக்கள் கொட்டியதால் 18 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். ஈஸ்வரமூர்த்தியின் தோட்டத்தில் காய்ந்த செடிகளுக்கு தீ மூட்டியதால் தென்னை மரத்தில் இருந்த தேனீக்கள் கொட்டியுள்ளது.

100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் 18 பேர் தேனீ கொட்டி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.