ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் சடலமாக மீட்பு!

02.09.2026 08:00:00

ஹம்பாந்தோட்டை நகரின் முன்னாள் மேயரான 57 வயதுடைய எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, திம்பிரிகஸ்யாயாவில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்திற்கான சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.