இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் பலி

25.09.2021 06:19:13

நாரம்மல – தம்பெலெஸ்ஸ பகுதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (24) பிற்பகல் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில், இரியாகம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொஹுவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் ​​பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.