ஒரே நாளில் 2,706 பேருக்கு கொரோனா

30.05.2022 07:47:54

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 புதிதாக 2,706 பேர் பாதித்துள்ளனர்.
 இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,55,749 ஆக உயர்ந்தது.
 புதிதாக 25 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,611 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,070 பேர் குணமடைந்துள்ளனர்.
 இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,13,440 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.
 சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.
 இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,698 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 1,93,31,57,352 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,28,823 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.