பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

23.05.2022 10:32:51

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 70ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

 

மும்பையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபிஷேக் சர்மா 43 ஓட்டங்களையும் ரொமாறியோ செப்பர்ட் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், நாதன் எலிஸ் மற்றும் ஹர்பீரிட் பிரார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரபாடா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 15.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், பாரூக்கி 2 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர், ஜெகதீசா சுஜீத் மற்றும் உம்ரான் மலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பஞ்சாப் அணி சார்பில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பீரிட் பிரார் தெரிவுசெய்யப்பட்டார்.