தமிழ், முஸ்லிம் கட்சிகளை சந்தித்தார் ஜனாதிபதி!
|
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்களை சந்தித்தார். இன்று (22) பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இச் சந்திப்பு இடம் பெற்றது. இனவாதத்தை ஒழிக்க, இலங்கையர் தினத்தை நடத்த, ஜனாதிபதி அநுர, தமிழ் முஸ்லிம் கட்சி எம்.பிக்களை அழைத்து, ஒத்துழைப்புகளை கோரியுள்ளார். |
|
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “இனவாதத்தை ஒழிக்க, நீங்கள் கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம். நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு சமாந்திரமாக, 'இலங்கையர் அடையாளம்' பேணி வளர்க்கப்பட வேண்டும். இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், 'உரிமைகளின் சமத்துவம்' இருக்க வேண்டும். இலங்கை தின கொண்டாட்டங்களின்போது, இலங்கையின் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், முகமாக கலாசார ஊர்வலம் நடத்துங்கள். இலங்கையின் பன்மைத்துவம் பற்றி, முதலில் இலங்கையர் அறிந்துகொள்ள வழி செய்யுங்கள்." தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில்,மனோகணேசன் எம்.பியுடன் பழனி திகாம்பரம் எம்பியும் மற்றும் பல்வேறு கட்சிகளின் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் கலந்து கொண்டனர். |