சூடான் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி!

04.05.2025 14:02:33

தென் சூடானின் பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையில் நேற்று (3) இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

குறித்த தாக்குதலில் 09மத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குண்டு வெடிப்பு சேதம் குறித்து மேலும் ஆராய்ந்து வருவதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.