வெற்றிமாறன் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளரா?
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவின் மிகவும் வெற்றிகரமான கூட்டணியாக அறியப்படுகின்றனர். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை' போன்ற பல சிறந்த படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி, ரசிகர்களின் பாராட்டை பெற்றனர். இந்த நிலையில், வெற்றிமாறனின் புதிய படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது, சம்பளம் தொடர்பான சில சிக்கல்களே இதற்கு பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வெற்றிமாறன் போன்ற தனது நெருங்கிய நண்பர்களுடன் பணிபுரியும் போது, சம்பளம் குறித்து வெளிப்படையாக பேசுவதிலும், முழுமையாக பெறுவதிலும் ஜிவி பிரகாஷூக்கு சிக்கல் இருப்பதாகவும், இதனால், தயாரிப்பாளர்களிடமிருந்து ஜி.வி. பிரகாஷுக்குச் சேர வேண்டிய பணம் முறையாகவும், சரியான நேரத்திலும் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.
ஜி.வி. பிரகாஷின் இந்த நிலை குறித்து வெற்றிமாறன் அறிந்த பின்னரே, ஒரு தொழில்முறையான முடிவை எடுக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் ஊகிக்கின்றன.
வெற்றிமாறன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இடையிலான கூட்டணியின் முடிவாக இருக்குமா அல்லது ஒரு தற்காலிக மாற்றமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.