வவுனியா சென்றவர் வீடு திரும்பவில்லை!

25.11.2021 06:16:02

கடந்த 05-11-2021 அன்று முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற  நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண் இன்றுவரை வீடு திரும்பாத நிலையில் இவரது மூன்று பிள்ளைகளும் தாயை காணாது தவித்து வருகின்றனர்.

குறித்த பெண் காணாமல் போன இரண்டு தினங்களில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இருப்பினும் இன்று வரை மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினரும் தனது மனைவியை தேடி தர அக்கறை காட்டவில்லை என்றும் தாயை காணாத நிலையில் பிள்ளைகள் தவித்து வருவதாகவும் தெரிவிக்கும் கணவன் தன்னுடைய மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 0765350421 எனும் குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை காவல்துறையினர் தனது மனைவியை தேடித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றார். தாய் காணாமல் போன நிலையில் 15 வயதுடைய ஆண் மகன் மற்றும் 12 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகள் ஆகியோர் தாயை காணவில்லை என மிகுந்த சோகத்தில் வாடுகின்றனர்.