அற்புதம் அம்மா... இதிகாசத்தில் கூட இப்படியொரு தாய் இல்லை !

20.05.2022 11:11:38

தனது மகனை வெளியே கொண்டு வர போராடிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் அரசியல் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அவரது விடுதலைக்கும், அவரின் தாயாரின் போராட்டத்தை குறிப்பிட்டு அரசியல் பிரபலங்கள் மட்டுமன்றி, திரைப்பிரபலங்களும் நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் நமக்குத் தெய்வம். 31 வருடங்களாக பெற்ற மகனுக்காகப் பாரம் சுமந்த தாய். இதிகாசத்தில் கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது. இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அற்புதம் அம்மா' என பதிவிட்டுள்ளார். 

பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் நமக்குத் தெய்வம். 31 வருடங்களாக பெற்ற மகனுக்காகப் பாரம் சுமந்த தாய் இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது. இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதத்தம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அற்புதம் அம்மா...🙏