திபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு சீனா கண்டனம்

30.07.2021 14:12:29

திபத் நாட்டை சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக முழுவதுமாக ஆக்கிரமிக்க பல ஆண்டு காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவை உலகை அச்சுறுத்தும் பயங்கரமான பிரிவினைவாதி என்று பெயர் சூட்டி வருகிறது சீன கம்யூனிச அரசு.

இந்நிலையில் திபெத் நாட்டுடன் எப்போதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நட்பு பாராட்டி வருகின்றன. இது அவ்வப்போது சீனாவை ஆத்திரமடைந்தச் செய்கிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் டில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் திபெத் தலைவர் தலாய் லாமாவின் கார்யதரிசி மற்றும் தூதர் கோட்ப் டோங்சாங்-ஐ அவர் சந்தித்துப் பேசியதற்கு சீனா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோ லீஜியான் கருத்து தெரிவித்துள்ளார். திபெத்-சீனா இடையே நடக்கும் விஷயங்கள் சீனாவின் உள் விவகாரம். இதில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஜோ பைடன் அரசு தொடர்ந்து திபெத்துக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.