தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி

31.07.2021 09:06:38

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜாமீன் சல்வார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். 

வெடி விபத்தில் ஒரு அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. 

வெடிவிபத்தில் சிக்கியவர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் மாட்டிக்கொண்டது. மரத்தின் மேல் தொங்கிய உடலை தீயணைப்புத்துறையினர்  மீட்டுள்ளனர்.