மத்திய அரசின் கொள்கையால் நாடு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது – ராகுல் காந்தி

15.07.2021 10:33:09

மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘வெளியுறவு கொள்கையும், பாதுகாப்பு கொள்கையும் உள்நாட்டு அரசியல் ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துவது நாட்டை பலவீனப்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு இவ்வளவு பலவீனமாக இந்தியா இருந்தது இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீன படைகள் நுழைந்து விட்டதாகவும், ஒரு இடத்தில் இந்திய – சீன படைகள் இடையே மோதல் நடைபெற்றதாகவும்  தகவல் வெளியாகியது.

இந்த தகவலை சுட்டிக்காட்டியே ராகுல் காந்தி குறித்த பதவினை இட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.