15 வயதான சிறுவன் உயிரிழப்பு!

23.07.2024 07:45:09

மேற்கு லண்டனின் Ladbroke Grove எனும் இடத்தில் 15 வயதான சிறுவனொருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சிறுவன் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது,  கடந்த 21 ஆம் திகதி மாலை 7:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக  சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துப்பாக்கிச்  சூடு சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.