கெஹலியவிற்காக களமிறங்கிய மகள்!

27.03.2024 15:04:55

கெஹலிய ரம்புக்வெல்ல எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரி ரம்புக்வெல்லவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமித்ரி ரம்புக்வெல்ல, தனது தந்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.