தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழகத்தில் வட்டமடிப்பார்!

10.04.2024 07:20:49

“பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் நாட்டில் வட்டமடிப்பார்” என தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”பருவகாலத்தில் சரணாலயத்திற்கு வரும் பறவைபோல் தேர்தல் காலத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வட்டமடிக்கிறார்.

அவரால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உத்தரவாதம் தரமுடியுமா? இல்லை தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும், ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா?  இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7ஆவது முறையாக நேற்று தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.