தமிழருக்கு எதிரான சக்திகளின் போலி பிரசாரம்

30.01.2023 22:06:55

இலங்கையின் அரசியலமைப்பில் இடம்பிடித்துள்ள  3 தொடர்பில் சட்டத்தை விரைந்து முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஹட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

13 தொடர்பில் போலி பிரசாரம்

தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரசாரத்தை முன்னெடுத்துவருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காவல்துறை, காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்லாது, 9 மாகாணங்களும் அதன்மூலம் பயன்கிட்டும்.

 

அதிகாரங்கள் இல்லாத மாகாண சபைகள்