இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

03.08.2021 12:00:00

மட்டக்களப்பிலிருந்து 1,300 கிலோமீற்றர் தொலைவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 மெக்னிடியூட் அளவில் இன்று காலை 9 மணியளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டிருந்தது.

கடலுக்கு அடியில் 95 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.

இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு தற்போது எவ்வித சுனாமி ஆபத்தும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.