விஜய் அரசுக்கு திருமாவளவன் கண்டிப்பு.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், முன்னேறிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக நீக்க கோரியும் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படவிருந்த வாகன பரப்புரை பயணத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவிருந்த இந்த பிரச்சாரத்திற்கு உரிய முறையில் முன்கூட்டியே அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தும், அரசு முடக்கியுள்ள விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் விஜய் தலைமையிலான தமிழக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கும் வகையில் காவல்துறை தடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான விசிக, அரசின் இந்த முடிவை பகிரங்கமாக எதிர்த்து குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக முறையில் நடத்தும் போராட்டத்திற்கு கூட அனுமதி மறுக்கப்படுவது பேச்சுரிமைக்கு விடப்படும் அச்சுறுத்தல் எனவும் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்குத் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.