7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

27.11.2021 08:16:22

7 மாவட்டங்களுக்கு நேற்றிரவு 11 மணிக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்றிரவு 11 மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது