எல்ஐசியின் முதலீடு பாதுகாப்பானது.
|
எல்ஐசியின் முதலீடுகள் குறித்து பரவலாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், வலதுசாரி பொருளாதார ஆய்வாளர்கள் எல்ஐசியின் முதலீடு பாதுகாப்பானதுதான் என்று கூறுகிறார்கள். எனவே தேவையற்ற பதற்றங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதானி மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் எல்ஐசி முதலீடுகளை செய்திருக்கிறது. இந்த முதலீடுகள் பாதுகாப்பற்றவை என்று சிலர் அச்சத்தை எழுப்பியிருக்கின்றனர். |
|
ஆனால் இந்த விமர்சனம் எல்ஐசி-யை குறி வைத்து அதன் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக முன்வைக்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். " எல்ஐசி "இதே போன்ற ஒரு நிச்சயமற்ற சூழல் கடந்த 2010 மற்றும் 13ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நிலவியது. பொதுமக்களின் நீண்ட கால கணிப்பு காரணமாக, முதலீடு செய்ய முடிவு எடுப்பவர்கள் தயங்கினார்கள். இதனால் நிலக்கரி, எரிசக்தி, மின்சாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் திட்டங்கள் தாமதமாகின. வங்கிகளில் வாரா கடன்கள் அதிகரித்தால் கோல் இந்தியா, என்டிபிசி, ஓஎன்ஜிசி மற்றும் பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகள் இல்லாமல் கொள்கை முடக்கம் காரணமாக சரிவை சந்தித்தன. அதேபோன்று நிலை மீண்டும் எல்ஐசிக்கு நிகழலாம். எல்ஐசி மிகப்பெரிய சேமிப்பை வைத்திருக்கிறது. கிட்டதட்ட 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசத்தின் சொத்துக்களை, சேமிப்பை எல்ஐசி நிர்வகித்து வருகிறது. இந்த சமயத்தில் எல்ஐசி மீதான நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கும் முயற்சிகள், ஒட்டுமொத்த இந்திய நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும். எல்ஐசி மீது விமர்சனங்களை வைப்பார்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், எல்ஐசி கடுமையான முதலீட்டு விதிகளின் தொகுப்பை பின்பற்றுகிறது. Powered By 4 லாபம் கிடைத்துள்ளது அதன் மொத்த நிதியில் 1 சதவீதத்திற்கும் அதிகமாக, எந்த ஒரு ஒற்றை குழுமத்திலும் முதலீடு செய்ய எல்ஐசி அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, முதலீடுகள் பாதுகாப்பானவை என்பதை நாம் நம்ப வேண்டும்" என வலதுசாரி நிபுணர்கள் கூறுகின்றனர். "ஒவ்வொரு முதலீடும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. குறிப்பாக உரிய கவனம் செலுத்துதல், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் விதிமுறைகளுக்கு இணங்குதல், நுணுக்கமான ஆய்வு ஆகியவற்ற எல்ஐசி செய்கிறது. எந்த ஒரு அரசியல்வாதியும் அல்லது தனிப்பட்ட அதிகாரியும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு உத்தரவு போட முடியாது. முதலீடு அவசியம் எனவே எல்ஐசியின் நிதி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் 300க்கும் மேற்பட்டவற்றில் பரவலாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. எல்ஐசி-யின் ஈக்குவிட்டி முதலீட்டின் மதிப்பு 2014இல் 1.5 லட்சம் கோடியிலிருந்து தற்போது 15.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மீதமுள்ள சுமார் 40 லட்சம் கோடி ரூபாய், மத்திய, மாநில அரசு பத்திரங்கள் மற்றும் நிலையான நிறுவனங்களில் ஏஏஏ தரம் மதிப்பீடு பெற்ற கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. நிலையான வருமானம் கடந்த 2017 முதல் அதானிக் குடும்ப நிறுவனங்களில் எல்ஐசி சுமார் 31,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதன் தற்போதைய மதிப்பு சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அதாவது இந்த முதலீட்டில் லாபம் கிடைத்துள்ளது. காப்பீடு என்பது ஒரு நீண்ட கால வணிகம். இன்று விற்கப்படும் பாலிசிகளை 20, 30 அல்லது 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மதித்து செலுத்த வேண்டி இருக்கும். எனவே காப்பீட்டளார்கள் நீண்ட காலத்திற்கு யூகிக்கக்கூடிய மற்றும் நிலையான வருமானத்தை வழங்கும் முதலீடுகளை விரும்புகின்றனர். விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார பரிமாற்ற நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகள் போன்ற உள்கட்டமைப்பு சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு நம்பகமான வருமானத்தை உருவாக்குகின்றன. சர்வதேச உதாரணங்கள் முதலீடு விஷயங்களில் சர்வதேச அளவில் உதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக பெர்சியர் அதாவே போன்ற உலகளாவிய நிறுவனங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா முழுவதும் மின்சார விநியோக நிறுவனங்கள், ரயில்வே மற்றும் இயற்கை எரிவாயு போன்ற உட்கட்டமைப்பு வசதிகளில் இருந்து கணிசமான லாபத்தை பெறுகின்றன. இது எல்ஐசியின் முதலீட்டு தேர்வை போன்றது. உட்கட்டமைப்புகளை தவிர்த்து ஐடி துறையில் அல்லது வங்கி துறைகளில் முதலீடு செய்வது என்பது புவிசார் அரசியல் நிகழ்வுகள் அல்லது தொழில்நுட்ப தடைகளால் பாதிக்கப்படலாம். எனவே நிலையான உட்கட்டமைப்பு சொத்துக்களில் எல்ஐசி அதன் முதலீட்டை குறைக்குமாறு கட்டாயப்படுத்துவது ஒட்டுமொத்த நிதி அமைப்புக்குள் அபாயத்தை அதிகரிக்கும். எல்ஐசி 1956ல் நிறுவப்பட்டதிலிருந்து தனது பாலிசிதாரர்களை ஒருபோதும் ஏமாற்றியதில்லை. பிரச்சனைகள் இருந்த காலங்களிலும் கூட, அது அனைத்து உறுதி மொழிகளையும் காப்பாற்றியுள்ளது. எனவே எல்ஐசி மீதான தற்போதைய விமர்சனம் இந்தியாவின் பொருளாதார நிலைத் தன்மையை பின்னோக்கி இழுப்பதற்கான அபாயத்தை உருவாக்கும்" என்று வலது சார் நிபுணர்கள் கூறுகின்றனர். |