திடீரென வானிலிருந்து விழுந்த ஒளிக்கற்றை

15.09.2022 09:17:38

மகாராணி

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனைக்கு மேலாக, வானில் இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது.

இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது.

மகாராணியாரின் பூதவுடல் நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள செயின்ட் கிட்ஸ் (St Giles) தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திடீரென வானிலிருந்து விழுந்த ஒளிக்கற்றை

 

தற்போதைய மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால் நடந்துவருவோரை முன் நடத்திச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை சரியாக மகாராணியாரின் பூதவுடல் மீது விழுந்தது.

அந்த காட்சியைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய், இது தெய்வீக செயல் என நெகிழ்கிறார்கள்.  

மக்களின் அஞ்சலி

இரண்டாவது எலிசபெத் மகாரணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஏற்கவே அவரது உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உடல் மக்களின் அஞ்சலிக்காக தற்போது பகிங்ஹாம் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

70 ஆண்டுகள்  மகாராணியாக மகுடம்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, ​​1952ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியாக மகுடம் சூடினார்.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.