மேலும் 14 துறைகளுக்கு வரி அறவிடத் தீர்மானம்!

09.07.2024 08:12:23

இதுவரையில் கவனம் செலுத்தாத  மேலும் 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரியினை அறவிடத் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”வரியைச் செலுத்தாமல் இருக்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், வரி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்ட காலம் இதுபோன்று வேறெதுவும் இருந்ததில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் கடந்த ஆண்டு, 14 துறைகள் வரி செலுத்துவதற்காக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனத் தாம் தீர்மானித்திருந்ததாகவும், பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் ஆகியன இந்த 14 துறைகளில் அடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த  14 துறைகளில்  அடங்குபவர்களின்  வருமானம் குறித்தும் உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் தெளிவான விசாரணை ஒன்றை நடத்தி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.