யாழ். காங்கேசன்துறையில் 9 காவல்துறையினருக்கு கொரோனா!

31.07.2021 03:56:28

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் அலுவலகத்தில் 9 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, தொற்றுக்குள்ளான அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.