வயல் நிலங்கள் சுவீகரிப்பு!

17.09.2022 09:59:00

 

வயல் நிலங்கள் சுவீகரிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர் மலைப் பகுதியில் தமிழ் மக்களின் வயல் நிலங்கள் சுவீகரிப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதன் களவியம் மேற்கொண்டார்.

குமுழமுனை, குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்களை தொல்பொருள் திணைக்களத்தினர் கடந்த வாரம் சுவீகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம்,

நேற்றைய தினம்(16) அப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளை பார்வையிட்டார்.

அமைச்சர் கொடுத்துள்ள வாக்குறுதி

 

உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்டு புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவிகரித்துள்ளதாகவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களது வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது, இது தொட‌ர்பாக உடனடியாக தான் விவசாயிகள் பாதிக்கபடாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.