மின்சாரம் தாக்கி முன்னாள் பிரதி அமைச்சர் உயிரிழப்பு!

17.04.2024 07:48:42

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான  பாலித தெவரப்பெரும   இன்று  தனது 64 வயதில்  காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரான பாலித தெவரப்பெரும வீட்டில் மின்சார தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து,  நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்கை பலனின்றி உயிரிழந்ததாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பாலித தெவரப்பெரும,  2010 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றிற்கு  தெரிவாகியிருந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் 2016 ஏப்பிரல் 6 ஆம் திகதி முதல் 2018 மே முதலாம் திகதி வரை உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி பிரதி அமைச்சராக பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.