ஆப்கனில் வெள்ளம் 150 பேர் உயிரிழப்பு

30.07.2021 14:15:10

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான நூரிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி, 150 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த, 150 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

நூரிஸ்தான் மாகாணத்தில் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும்படி தலிபான் அமைப்பினரிடம், ஆப்கன் அரசு வலியுறுத்தி உள்ளது.