அதி கூடிய அதிகாரப்பகிர்வுக்கு பிரதமர் மோடி துணை
03.05.2022 11:08:34
இலங்கை தமிழர்கள் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட பற்று இருக்கின்றது.
உங்களுக்கு நீதியான நியாயமான அதி கூடிய அதிகாரப்பகிர்வுகள் கிடைப்பதற்கு அவர் துணை நிற்பார்.
இவ்வாறு இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடந்த பேச்சு வார்த்தையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.