நாட்டு மக்களுக்கு விசேட உரை

24.06.2024 08:03:34

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பால் இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.