அவதானமாக இருக்குமாறு இஸ்ரேல் வேண்டுகோள்!

24.09.2024 08:09:05

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹெஸ்புல்லாவின் வான் வழித் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறெனினும், இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு சமிக்ஞைகள் ஒலிக்கப்படும் போது, ​​இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.