குறிஞ்சாக்கேணி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

28.11.2021 07:28:37

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு இன்று காலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது